பூச்சூட்டல்

(யசோதை பாவத்திலிருக்கும் பெரியாழ்வார் அந்த கரிய குழல் உடையவனை (எம்பிரானை) விதவிதமான பூக்களைச் சூட அழைக்கிறார்) ஆஹா...இந்த பிரபந்தத்தில் வரும் பத்து பாடல்களில் ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு விதமான பூவைச்சூட எம்பிரானை அழைப்பதாக அமைந்துள்ளது... இப்பூக்களில் (படங்களை காணும் போது) சிலவற்றை தவிர மற்றவை அனைத்தும் இறக்குமதியான பூக்கள் என்று நினைத்தது உண்டு !இத்தனை வருட காலம் அப்படித்தான் நினைத்தேன் இன்று வரை... ஆனால் அது நம் தேசத்தின் பூக்கள்.... அதற்கு அழகழகான தீந்தமிழ் பெயர்கள்... (புன்னை,கருமுகை, செங்கழுநீர், குருக்கத்தி, இருவாட்சி செண்பகம்... அப்பப்பா! தேன் வந்து பாயுது காதினிலே) இதோ ஆழ்வார் பாசுரத்தின் சிறு குறு சுருக்கம்! இந்த பத்து நாட்களும்...யசோதை தன் மைந்தனை பூச்சூட அழைக்கிறார்... ஒவ்வொரு பாடலிலும்...அவனை உவக்கிறாள்... நெகிழ்கிறாள்...வாஞ்சை யாகச் சாடுகிறாள்...பூச்சூட அழைக்கிறார்... அவள் உவந்து அழைத்த வரிகள்..."அருமருந்தாவது அறியாய்"(சம்சாரிகளின் பாவத்தைப்போக்கும் அருமருந்து நீ) "கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்" "முகிற்கன்று போலே"(ம...