Posts

Showing posts from May, 2025

பாரங்குச நாயகி படும்பாடு- தாயாரின் முறையீடு.கங்குலும் பகலும்

Image
திருவாய்மொழி 7.2 இப்பதிகம் அரங்கனைப் பற்றியது.அரங்கனைப் புகழும் பாசுரமல்ல; அவனிடம் அவனைப்பற்றியே முறையிடும் பாசுரம்...ஒருவரிடம் பன்முகத்தன்மை (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட) கொண்ட வேறுபட்ட குணங்கள் உண்டு என்று சமீபத்தில் தான் கண்டறிந்துள்ளனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதைப்பற்றி பதிவு செய்திருக்கிறார் நம் ஆழ்வார்...ஆம்! நம்மாழ்வார்! நம்மாழ்வார் எம்பெருமானின் மீது கொண்ட தீராத காதல் காரணமாக நாயகி(பராங்குச நாயகி)பாவம் கொள்கிறார்... அவனை விட்டு பிரிந்து அவள் படும் பாடு தாங்காமல் பராங்குச நாயகியின் தாயாராக பாவம் கொண்டு...அவள் படும் வேதனைக்கு வழி சொல்லுமாறு முறையிடுகிறாள்... இவ்வாறாக... உன்னை நினைத்து உருகி (அரங்கன்) இரவும் பகலும் தூக்கம் என்பதே அவள்(பாரங்குச நாயகி)கண்களுக்கு தெரியாமல் போனது...கண்களில் கண்ணீர் கொட்டுகிறது...துடைக்கும் படியாக அல்ல...இறைக்கும் படியாக...(அப்படியானால் நாமே முடிவுக்கு வந்து விடலாம் அவள் கண்களில் எவ்வளவு நீர் கொட்டி யிருக்கும் என்று)அழுவதை விட்டு விட்டு திடீரென கைகூப்புகிறாள்...கேட்டால் அங்கே சங்கு சக்கரங்கள் தெரிகிறது என்கிறாள்....

கண் கோடி வேண்டும்

Image
 திருவாய்மொழி 7.4 (ஒவ்வொரு அவதாரத்திலும் பெற்ற வெற்றிகளை ஆழ்வாருக்கு சேவை சாதிக்கிறார் எம்பெருமான்) அவன்(எம்பெருமான்) எடுத்த அவதாரம் அனைத்திலும் நம்மாழ்வார்  உடன் இருப்பதாக...(ஒன்றி நின்ற சடகோபன்)உடன் பயணிப்பதாக... ஆழ்வார் உணர்கிறார்! ஆழ்வார் அந்த "பேரானந்தத்தை"நமக்கு பாசுரம் வழியாக கடத்துகிறார்...அது இன்னும் இன்னும் ஆனந்தமாக இருக்கிறது! இந்த பதிகமனைத்தும் செவிக்குசுவை மிகுந்து இருக்கிறது! அத்தனையும் சந்த நயத்துடன்...ஒருவித சங்கீதத்துடன்... கேட்க கேட்க இனிமை! இனிமை மட்டுமா இதோ ஆழ்வார் ஒவ்வொரு அவதாரத்தையும் இப்போது... இங்கே...இச்சனம்...நடந்தது போல ... பாடியிருக்கிறார்...கண்களை மூடிக் கொள்ளுங்கள்! ரசிக்கத் தயாராகுங்கள்! முதல் பாட்டிலேயே "திரு விக்கிரமன்" வரப்போகிறான்! என்ன இருகரம் கூபீபிவிட்டீர்களா!  "வாமன மூர்த்தியிலிருந்து" "திருவிக்கிரமனாக" மாறுகிறார் அற்புத காட்சி  இதோ சக்கரத்தாழ்வான்... சங்கம்...கோதண்டம்(வில்)..கதை...வாள்... இவையனைத்தும் புடைசூழ அனைத்து திசைகளில் இருந்தும் "வாழ்த்தொலி" முழங்க... இவ்வுலகின் நீர்க்குமிழியை உடைத்து எழுக...

தேவுமற்றுமறியேன்(கண்ணி நுண் சிறு தாம்பு)

Image
  கண்ணி நுண் சிறு தாம்பு (மதுரகவி யாழ்வார் நம்மாழ்வார் மீது கொண்ட தீராத ஆச்சார்ய பக்தியைக் கூறுகிறது இப்பிரபந்தம்)  எதில் துவங்குவது... எதில் தொடர்வது...எழுதத் துவங்கியதும் இப்பிரபந்த கருத்துகள் அனைத்தும் மழைபோல் கொட்டுகின்றன! மதுரகவியாழ்வார் ... அவரின் ஆச்சார்ய பக்தி...மெய் சிலிர்க்கிறது... கரடுமுரடான சிறு கயிற்றினால் தன்னை கட்டும் படியாக செய்தவன் யார் தெரியுமா... இவ்வுலகை யெல்லாம் ஆள்பவன்... இவ்வாறெல்லாம் கூறும்போது ஆழ்வார் பெருமாளைப் புகழ்வது போல் தானே தோன்றுகிறது...அது தான் இல்லை.. அப்படி எளிமை பொருந்திய பெருமாளைவிடவும் தனது ஆச்சார்யர் நம்மாழ்வார்(திருக்குரு கூர் நம்பி) என்றதுமே நாவு தேனை விடவும் இனிக்கிறதாம்...(நம்பி-குணப்பூர்த்தியுடையவன் ...இந்த சொல் பிரயோகத்தை பெருமாளைத் தவிர முதன் முறையாக தனது ஆச்சார்யருக்கு பயன்படுத்துகிறார் ஆழ்வார்) அடுத்து நம்மாழ்வார் அவதரித்த திருக்குருகூரின் மேன்மை...தங்கத்தால் இழைத்த மாடங்கள்... குயில்கள் நின்று ஆரவாரிக்கும் ஊர்...இவ்வாறெல்லாம் சொல்ல சொல்ல திருக்குருகூர் நம் முன் விரிகிறது... நம்மாழ்வார் என்ற பெயரை சொல்லிச் சொல்லி அடியேன் இன்பத்த...

குணக்கடல்

Image
 திருவாய்மொழி 7.5 ஆழ்வார்கள் பாசுரங்களில் மட்டுமே எம்பெருமானின் எந்த அவதாரம் எப்போது வரும் என்று கூற முடியாது  தயாராக மனதை வைத்தால் மட்டும் போதும்.எம்பிரானை ஆழ்வார் பயணிக்கும் அத்தனை அவதாரிங்களிலும் மனம் குளிர சேவிக்கலாம். இந்தப்பதிகம் வெகு சிறப்பு வாய்ந்தது ஏனெனில் இதில் வரும் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு அவதாரத்தையும் அந்த அவதாரத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த குணங்களையும் எடுத்துரைக்கிறார். கற்பது என்றாலே அது எம்பெருமானைக் கற்பது மட்டுமே.வேறு எதுவும் கற்பதில் சேர்வதில்லை. அதிலும் "இராமபிரான் "குணங்களையே முதலில் கற்க வேண்டும் (கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ) ஏன் இராமனை முதலில் வைக்கிறார்! காரணம் இருக்கிறது இராமனின் குணம் அப்படி! கடிந்து பேசாதவன்! சத்ய வழியில் நடப்பவன்!சுலபன்! அடியார்க்கு இரங்குபவன்! அயோத்தியின் அத்தனையையும்(அசையும் அசையா பொருட்கள்)உய்வித்தவர்!கற்றால் இராமபிரானைக்கற்க வேண்டும் அப்படியானால் கேட்டால்?   ....."கேசவன் கீர்த்தியைக்" கேட்க வேண்டும்  செவி தாங்காத படி வசவுகளால் பழித்த அந்த சிசுபாலனைகொன்று தன் திருவடி சேர்த்தவன்.. அவன் ! நாம் உய்வதற்...

எங்கும் எதிலும் அவனே(எம்பிரானே)

Image
  திருவாய்மொழி 7-8 போன பதிகத்தில் ஆழ்வாரை வருந்த வைத்த எம்பிரான் இந்த பதிகத்தில்  அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார். இந்த பதிகத்தில் வரும் பத்து பாடல்களை அனுபவித்த பின் திரும்பிய இடமெல்லாம் எம்பிரானே இருப்பதாக ஓர் உணர்வு (சன்னல்,பேனா,புத்தகம் இப்படி)பாசுரத்தின் தன்மை அப்படி !  அனைத்தும் அவனே என்பதற்கு  அழகு அழகாக ஆழ்வார் உணர்ந்து  விவரித்து கூறும் போது... அனைத்தும் நம் கண் முன்னே விரிகிறது! வெகு நாட்களாக இந்த வரிகள் எங்கு வரும் எனக்காத்திருந்தேன் அடியேன். இதோ வந்து விட்டது! நினைத்து நினைத்து ஆறுதல் பட்ட வரிகள்! அன்னையாய்...தந்தையாய்...மக்களாய்...மற்றுமாய்...எல்லாமுமாய் அவன் மட்டுமே! பாசுரத்தில் வீரயம் இதிலிருந்தே துவங்கி விடுகிறது... ஆழ்வார் ஒரு வார்த்தைக்கு  அருகிலேயே அதற்கு எதிர் சொல்லை பயன்படுத்துகிறார்... இவ்வாறாக...திங்கள் - ஞாயிறு (சந்திரன்-சூரியன்) இருள்-சுடர் புகழ்-பழி உள்ளதும்-இல்லதும்(சித்து-அசித்து) கழியாய்(இறப்பு)-பிறப்பாய் அயர்ப்பு(மறதி)-தெளிவு நெருப்பாய்-நீராய் உருவாய்-அருவாய் இவையனைத்துமாக இருப்பவன் அவன் ஒருவனே என்கிறார்... இது என்ன "ஆச்சரியம்...

காப்பிடல்

Image
(யசோதை பாவத்தில் இருக்கும் பெரியாழ்வார்  அவன் செய்யும் சேட்டி தங்களை கண்டு பேரானந்தம் கொள்கிறாள்.கூடவே பயமும் ஏற்படுகிறது...கண் பட்டு விடுமோ இந்த கரிய மாலுக்கு... என்று "திருவந்திக்காப்பு" (திருஷ்டி கழித்தல்) காட்ட அழைக்கிறார்) வாருங்கள் அனைவரும் யசோதை பாவத்திற்குசெல்லலாம்.... நொடிக்கு நொடி உனக்குச்சுற்றி போடலாம் அவ்வளவு அழகு நீ! இந்த சந்திரன் வரும் அந்திப்பொழுதாவது உனக்கு காப்பிட வேண்டும்! என்று நினைத்து க்கொண்டே அவன் செய்யும் சேட்டைகளை நினைவு கூறுகிறாள்... சிறு பெண்கள் மண் வீடு கட்டி...சமைத்து... விளையாடிக் கொண்டிருக்க... அங்கு சென்று அவற்றை கலைத்து விட்டு வந்து என்னிடம் நன்றாக திட்டு வாங்கினாய்!  அப்படி யெல்லாம் இப்போது நான் திட்ட மாட்டேன்!பயம் வேண்டாம் ... காப்பிடவாராய்! சிறு பெண்களின் கண்களில் மண்ணைத் தூவுகிறாய்! எட்டி உதைக்கிறாய்! இதெல்லாம் நீயாகவா செய்கிறாய்? இல்லை இல்லை உன் சேர்க்கை சரியில்லை (செய்தனைத்தும் இவன் மட்டுமே) அதனால்தான்!ஊரில் உள்ள பிள்ளைகள் சேட்டைகள் செய்து விட்டு போக ...அது உன் மேல் விழப் போகிறது... அனைவரும் படுத்து உறங்கும் நேரமாயிற்று வாடா கண்ணா காப்பிட...

அமலன் ஆதி பிரான்

Image
திருப்பாண் ஆழ்வார் அரங்கனின் முன் நிற்க... அரங்கனைக் கண்டதும் அவனிடமிருந்து... அருள் வெள்ளம் பாய்ந்து வர...அந்த வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லாமல் இருக்க அருகில் இருக்கும் திருமணத்தூணை இறுக பற்றிக்கொள்கிறார்... இப்போது அனைவரும் மனதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்... ஆழ்வாரின் பக்தி வெள்ளம் வரப்போகிறது... அந்த அரங்கன் அருளால் ஆழ்வார் பாடுகிறார்...மெய் சிலிர்க்கிறார்... வார்த்தையில் வடிக்கிறார் இவ்வாறாக... "திருப்பாதத்திலிருந்து" "திருக்கண்கள்" வரை  ஒவ்வொரு அவயமாக  சேவிக்கிறார் ஆழ்வார்... அழகு அழகான நாமங்களைச் சொல்லி அழைக்கிறார்... அமலன்...விமலன்.. நிமலன்...நின்மலன்...நீதிவானவன்...நீண்டமதில்களையுடைய இந்த அரங்கனின் "திருப்பாதம்" என் மனத்துள் புகுந்து கண்களை நிறைத்துக்கொண்டது. வாமனனாய் வந்து இவ்வுலகைக்காத்தவன்... காகுத்தனாய்(இராமனாய்) வந்து அரக்கர்களை அழித்தவன் இன்று அந்த அழுப்பு தீர திருவரங்கத்தில் படுத்திரிக்கிறான்...அவன் "பீதாம்பரத்தின்" (சிவந்த ஆடை) மேல் என் சிந்தனை  எல்லாம் செல்கின்றது...அந்த மாலை நேரத்து நிறத்தையுடைய ஆடை அணிந்த இடையிலேயே கண்கள் ப...